/* */

திண்டுக்கல் துப்பாக்கி சூடு: தென் மண்டல ஐ.ஜி. அன்பு நேரடி விசாரணை

திண்டுக்கல் துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி தென் மண்டல ஐ.ஜி. அன்பு சம்பவ இடத்திற்கு வந்து நேரடி விசாரணைநடத்தினார்.

HIGHLIGHTS

திண்டுக்கல் துப்பாக்கி சூடு: தென் மண்டல  ஐ.ஜி. அன்பு நேரடி விசாரணை
X

துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அன்பு நேரடி விசாரணை நடத்தினார்.

திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் அருகே உள்ள செட்டிக்குளம் என்ற குளத்தை மீன் வளர்ப்பதற்காக மேற்கு மரியநாதபுரம் பகுதியை சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகன் ராக்கி என்ற ராகேஷ்குமார் (26) குத்தகைக்கு எடுத்துள்ளார்.

இந்நிலையில் நள்ளிரவு குத்தகை எடுத்த குளத்தின் அருகில் தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் இடது விலாவில் 6 பால்ரஸ் குண்டுகள் பாய்ந்த ராகேஷ் குமாரை உடனிருந்த நண்பர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள் பரிசோதனை செய்த பொழுது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினார் .

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. விஜயகுமாரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்நிலையில் மோப்ப நாய் ரூபி மற்றும் தடவியல் நிபுணர்கள் உதவியுடன் ஆய்வு செய்தனர்.

இதனை அடுத்து குற்றவாளிகளை கைது செய்வதற்காக ஏ.எஸ்.பி. அருண் கபிலன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

பின்னர் தென் மண்டல காவல்துறைத் தலைவர் அன்பு சம்பவம் நடந்த இடத்திற்கு நேரடியாக வந்து ஆய்வு செய்தார். ஆய்வின்போது திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.

திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் தென் மண்டல காவல்துறை ஐ.ஜி. அன்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியில் நள்ளிரவு ராகேஷ் என்பவர் மர்மநபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரகாஷ், கணேசமூர்த்தி, ஜான் சூர்யா, மரியபிரபு ஆகிய நான்கு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் நடந்து 10மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகளிடம் இருந்து இரண்டு அறிவாள், இவர்களால் தயாரிக்கப்பட்ட நாட்டுதுப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது .

மேலும் காவல்துறை விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் குற்ற பின்னணியில் வேறு குற்றவாளிகள் யாரும் இருப்பின் கைது செய்யப்படுவார்கள் என்றார்.

Updated On: 4 Jan 2022 3:54 AM GMT

Related News

Latest News

  1. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  2. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  3. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  4. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  5. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  6. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  7. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  8. தமிழ்நாடு
    சதுப்பு நிலம் அடையாளம் காணும் பணி துவக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்...
  9. காஞ்சிபுரம்
    சுடுகாடு எங்கே ? தேடி அலைந்த இருளர் குடியிருப்பு வாசிகள்!
  10. காஞ்சிபுரம்
    உள்துறை அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் ஸ்டாலின் - ஜெயக்குமார்!