/* */

புதை சாக்கடை அடைப்பை சீரமைக்க லஞ்சம் கேட்கும் அதிகாரிகள்: பாஜக கண்டனம்

லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாஜவினர் ஆர்ப்பாட்டம்

HIGHLIGHTS

புதை சாக்கடை அடைப்பை  சீரமைக்க  லஞ்சம் கேட்கும் அதிகாரிகள்: பாஜக கண்டனம்
X

திண்டுக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்.

திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் புதை சாக்கடை குழாய் அடைப்பை சரிசெய்ய, அதிகாரிகள் லஞ்சம் கேட்பதற்கு கண்டனம் தெரிவித்து, பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது

திண்டுக்கல் பகுதிகளில் உள்ள 48 வார்டுகளில் புதை சாக்கடை அமைக்கும் பணி கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இன்னும் பல்வேறு வார்டுகளில் புதைசாக்கடைத் திட்டப்பணிகள் முழுமையடையாமல் உள்ளது. இதனிடைய தற்போது பணிகள் முடிந்து செயல்பட்டுவரும் பாதாள சாக்கடை திட்டப் பகுதிகளில் அடைப்புகளை சரி செய்ய வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் பணம் லஞ்சமாக கேட்பதாக புகார் எழுந்து வருகிறது.

இதைக் கண்டித்து, பாரதிய ஜனதா கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் தனபால் தலைமையில், பாரதிய ஜனதா கட்சியினர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாநகராட்சி அதிகாரிகள் லஞ்சம் பெறுவதற்கு எதிராகவும் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும் முழக்கமிட்டனர்.

Updated On: 14 Sep 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  3. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  4. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  7. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  8. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  9. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...