/* */

உணவு கிடைக்கவில்லையா? எங்களை கூப்பிடுங்க: திண்டுக்கல் எஸ்.பி.

கொரோனா ஊரடங்கால் உணவு கிடைக்காதவர்கள், காவல்துறையை அழைக்கலாம் என்று திண்டுக்கல் எஸ்.பி. அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

உணவு கிடைக்கவில்லையா? எங்களை கூப்பிடுங்க: திண்டுக்கல் எஸ்.பி.
X

கொரோனா பரவலை தடுப்பதற்கு, தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால் தனியாக வசிக்கும் முதியவர்கள் சாலையோரம் மற்றும் மேம்பாலங்களில் கீழ் பகுதிகளில் தங்கி இருக்கும் ஆதரவற்றோருக்கு உணவு கிடைக்காமல் சிரமப்படும் நிலை உள்ளது.
இதை தவிர்க்கும் வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் அது போன்ற நபர்களுக்கு, போலீசார், தன்னார்வலர்கள் உதவி செய்து வருகின்றனர். இத்தகைய நபர்களுக்கு உதவும் வகையில் போலீஸ் முத்துசாமி, போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா ஆகியோர், சிறப்பு ஏற்பாடு செய்துள்ளனர்.
அதன்படி உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காதவர்கள் போலீசார் தொடர்பு கொண்டு உதவி கேட்கலாம். அவர்களுக்கு உணவு அத்தியாவசிய பொருட்கள் போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் உடனடியாக வழங்கப்படும்.
உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவிப்பவர்கள், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை, 9498101520 எனும் எண்ணிலும், நவீன போலீஸ் கட்டுப்பாட்டு அறையை 9176098100என்ற எண்ணிலும், போலீஸ் கட்டுப்பாட்டு அறையை9498181204 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என, எஸ்.பி. ரவளிப்ரியா தெரிவித்துள்ளார்.

Updated On: 28 May 2021 5:24 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  5. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  6. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  7. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  8. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  9. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  10. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்