Begin typing your search above and press return to search.
திண்டுக்கல் திருமண மண்டபத்தில் நின்றிருந்த சொகுசு கார் தீ பிடித்ததால் பரபரப்பு
திண்டுக்கல் தனியார் திருமண மண்டபத்தில் நின்றிருந்த சொகுசு கார் திடீரென தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
HIGHLIGHTS
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள வி.ஜி.எஸ் மண்டபத்தில் திருமண விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. திருமண விழாவிற்கு வெளியூரில் இருந்து ஏராளமானோர் சொகுசு கார்களில் வந்திருந்தனர். மண்டபம் அருகே உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் சொகுசு கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
அதில் ஒரு காரில் பேனட்டில்லிருந்து திடீரென புகை வரத் தொடங்கியது. இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக தண்ணீர் கொண்டு வந்த தீயை அணைக்க முயற்சித்தனர்.
அப்போது கார் என்ஜின் பகுதியில் திடீரென தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. மண்டபத்தில் இருந்த தண்ணீரை கொண்டு தீயை அணைத்தனர். இருந்தபோதிலும் காரின் என்ஜின் முழுமையாக எரிந்து நாசமாகின. இதனால் மண்டபத்துக்கு அருகே சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.