/* */

திண்டுக்கல் பாமக செயலாளர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

திண்டுக்கல் தெற்கு மாவட்ட பாமக செயலாளர் சிவக்குமார் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

HIGHLIGHTS

பாட்டாளி மக்கள் கட்சியின் திண்டுக்கல் தெற்கு மாவட்ட இருப்பவர் வழக்கறிஞர் சிவக்குமார். இவர் திண்டுக்கல் திருச்சி சாலையில் உள்ள சீலப்பாடி பிரிவு அருகே செல்வி நகரில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு மாவட்ட செயலாளர் சிவக்குமார் தனது வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, தொடர் மழையின் காரணமாக ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. அப்போது சீலப்பாடி பிரிவு அருகே எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 3 பேர் திடீரென்று சிவக்குமாரை தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

அக்கம் பக்கத்தினர் உதவியுடன் முகத்தில் காயத்துடன் சிவக்குமார் திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவல் அறிந்து கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா மற்றும் திண்டுக்கல் பாட்டாளி மக்கள் கட்சியினர் மருத்துவமனைக்கு வருகை தந்து வருவதால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் இல்லை என்றால் பாமக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர். தாக்குதல் குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 15 தினங்களுக்கு முன்பு ஆத்தூர் தொகுதி சின்னாளப்பட்டி பகுதியில் திமுக அமைச்சரும், ஆத்தூர் தொகுதி எம்.எல்.ஏவுமான ஐ.பெரியசாமி செயல்பாடுகள் குறித்து பாமக சார்பில் சுவரொட்டி ஒட்டப்பட்டது. அப்பொழுது திமுகவினர் சுவரொட்டிகளை கிழித்து பாமகவினரை தாக்கி அராஜகத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து பாமகவினர் சார்பில் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசனிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் மாவட்ட செயலாளர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 2 Jan 2022 11:33 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  4. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  7. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  8. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  9. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  10. வீடியோ
    🔴LIVE : மீண்டும் அயோத்தியில் பாரத பிரமர் மோடி || PM Modi performs...