படபிடிப்பு தளத்தில் நடிகர் சேரனுக்கு தலையில் பலத்த அடி
படபிடிப்பு தளத்தில் நடிகர் சேரன் தலையில் அடிபட்டு ரத்தம் சொட்ட சொட்ட தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.
HIGHLIGHTS
திண்டுக்கல்லில் ஆனந்தம் விளையாடும் வீடு என்ற திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை நந்தா பெரியசாமி இயக்குகிறார். ரெங்கநாதன் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர்கள் சேரன், மல்லூரி கௌதம் கார்த்திக் உட்பட நடிகர் பட்டாளமே நடித்து வருகின்றனர். திண்டுக்கல் மின்சார வாரியத்துக்கு பின்னால் உள்ள அங்குவிலாஸ் குடும்பத்துக்குச் சொந்தமான இடத்தில் இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது.
இதில் ஆனந்தம் விளையாடும் வீட்டின் கட்டடத்தை சுற்றி பார்க்கும் காட்சியில் நடிகர் சேரன் நடித்துக் கொண்டிருக்கும்போது கால் இடறி கீழே விழுந்து தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியது. இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று 8 தையல்கள் அவர் தலையில் போடப்பட்டது. பின்பு அவர் வலியை பொருட்படுத்தாமல் தனக்குள்ள காட்சியில் நடித்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் சேரனின் மன ஆற்றலை நடிகர்களும், படக்குழுவினரும் பாராட்டியுள்ளனர். மேலும் படக் குழுவில் பெரும்பாலான ஊழியர்கள் முககவசம் அணியாமலும், தனிநபர் இடைவெளி இல்லாமலும், கிருமி நாசினியை சரிவர பயன்படுத்தாமல் படப்பிடிப்பு நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், படப்பிடிப்பு தளத்தில் போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் படபிடிப்பு நடந்ததாக கூறப்படுகிறது.