/* */

தர்மபுரியில் கருணைக்கிழங்கு விலை அதிகரிப்பு

தர்மபுரியில் வரத்து குறைவு கருணைக்கிழங்கு விலை ஒரே நாளில் ரூ. 9 அதிகரித்துள்ளது

HIGHLIGHTS

தர்மபுரியில் கருணைக்கிழங்கு விலை அதிகரிப்பு
X

சித்த மருத்துவத்தில் தேரையர் நோய் அணுகாவிதி என்ற நூலில் மண்பரவு கிழங்குகளில் கருணையன்றி புசியோம்என்று சொல்லப்பட்டிருப்பதன் மூலம் கிழங்கு வகைகளில் கருணைக்கிழங்கு மட்டுமே சிறந்தது என வலியுறுத்தப்படுகிறது. ஊட்டச்சத்து அளிக்கும் கிழங்கு வகைகளில் முக்கிய இடத்தை பிடிப்பது கருணைக்கிழங்கு. ஈரப்பதமான பகுதிகள் மற்றும் மிதமான வெயில் நிலவும் பகுதிகளில் கருணைக்கிழங்கு பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கருணைக்கிழங்கை விவசாயிகள் சாகுபடி செய்து வருகிறார்கள். கருணைக்கிழங்கில் நார்ச்சத்து, வைட்டமின் சத்துக்கள், இரும்புச்சத்து ஆகியவை அதிக அளவில் உள்ளன. பசியின்மை, வயிறு தொடர்பான கோளாறுகள், செரிமான பிரச்சினை இருப்பவர்கள் கருணைக்கிழங்கை உணவில் சேர்த்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கருணைக்கிழங்கு வரத்து அதிகமாக இருந்ததால் அதன் விலை கணிசமாக குறைந்தது. தர்மபுரி உழவர் சந்தையில் ஒரு கிலோ ரூ.35-க்கு விற்பனையானது. நேற்று சந்தைக்கு கருணைக்கிழங்கு வரத்து வழக்கத்தை விட குறைந்தது. இந்த நிலையில் தேவை அதிகரித்ததால் நேற்று ஒரே நாளில் கிலோவிற்கு ரூ.9 விலை உயர்ந்தது.

ஒரு கிலோ ரூ.44- க்கு விற்பனை செய்யப்பட்டது. வெளிமார்க்கெட்டுகளில் 1 கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டது. கருணைக் கிழங்குக்கு அதிக விலை கிடைத்ததால் அதை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்

Updated On: 11 July 2023 9:08 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்