/* */

உதவித்தொகை உயர்த்தி கேட்டு மாற்று திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

உதவித்தொகை உயர்த்தி கேட்டு மாற்று திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
X

பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் உதயகுமார் தலைமை தாங்கி பேசினார்.

இதில் தெலுங்கானா, பாண்டிச்சேரி மாநிலங்களைப் போல சாதாரண மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகைக்கு பதிலாக மாதம் மூவாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும். கடுமையான மாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரத்து ஐநூறிலிருந்து 5000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.

100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ஷர்மிளா, ராஜமணி,ராஜமணி, சுரேஷ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Updated On: 27 Aug 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...