/* */

வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு கேட்டு பாமகவினர் ஆர்ப்பாட்டம்

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை திரும்ப வழங்கக்கோரி, கடத்தூர் பேருந்து நிலையம் அருகே, பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு கேட்டு பாமகவினர் ஆர்ப்பாட்டம்
X

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை திரும்ப வழங்கக்கோரி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர்.

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்து, மதுரைக் கிளை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இடஒதுக்கீட்டை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தருமபுரி பாமக சார்பில், கடத்தூர் பேருந்து நிலையம் அருகே , மாவட்ட செயலாளர் செந்தில் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தமிழக அரசு இந்த வழக்கின் மீது மேல்முறையீடு செய்ய வேண்டும்; வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உழவர் பேரியக்கம் மாநில செயலாளர் வேலுச்சாமி, சமூகநீதிக்கு எதிராக திட்டமிட்டு ஒரு சிலரால் மதுரை கிளை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார். .இதனிடையே, உள் இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டுமென வலியுறுத்தி, பாமகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில், பாமக மாநில செயலாளர் அரசாங்கம் உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 2 Nov 2021 12:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?