/* */

வேலை வாங்கி தருவதாக பட்டதாரியிடம் ரூ.15 லட்சம் மோசடி

சர்வதேச மக்கள் உரிமை கழக தலைவர் என அறிமுகமான கவிதா இராமதாஸ் என்பவர் ரூ 15 லட்சம் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.

HIGHLIGHTS

வேலை வாங்கி தருவதாக பட்டதாரியிடம் ரூ.15 லட்சம் மோசடி
X

பைல் படம்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அடுத்த ரேகடஅள்ளி கிராமத்தை சேர்ந்த கருணாநிதியின் மகன் காந்தி (34). பட்டதாரியான இவர் வேலை கிடைக்காததால் கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவரிடம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நன்னடத்தை அலுவலர் வேலை வாங்கி தருவதாக சர்வதேச மக்கள் உரிமை கழக தலைவர் என அறிமுகமான தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த கவிதா இராமதாஸ் என்பவர் ரூ 15 லட்சம் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் வேலை வாங்கி தரவில்லை. பணத்தை திருப்பி கேட்டும் தரவில்லை. இதில் ஏமாற்றமடைந்த காந்தி சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார். சென்னை உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் தர்மபுரி மாவட்ட குற்றபிரிவு போலீசார் கவிதா ராமதாஸ், அவரது கணவர் வினோத் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 28 March 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...