/* */

மல்லசமுத்திரத்தில் ஆடு முட்டி விவசாயி உயிரிழப்பு

பாலக்கோடு அருகே, மல்லசமுத்திரத்தில் ஆடு முட்டி விவசாயி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பேளாரஹள்ளி மல்லசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் பெரியண்ணன் 60. இவர், ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். கடந்த 27 ந்தேதி பிற்பகல் குறட்டை ஏரியில் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது, அதில் ஒரு ஆடு பெரியண்னணை முட்டித் தள்ளியதில் அவர் தடுமாறி கீழே விழுந்தார்.

இதில் அவருக்கு தலையில் பின்பக்கம் மற்றும் இடது கால் தொடையில் பலத்த உள் காயம் ஏற்பட்டது. தகவல் தெரிந்து உறவினர்கள் அவரை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்பு மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மகன் முனியப்பன் கொடுத்த புகாரின் பேரில் பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 29 March 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
  2. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!
  3. பல்லடம்
    பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணி; அமைச்சா் சேகா்பாபு நேரில்...
  4. திருப்பூர்
    மழை வேண்டி நாளை பிரார்த்தனை: இந்து முன்னணி அழைப்பு
  5. வந்தவாசி
    மது போதையில் ரகளை செய்த மகன்; கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய ‘ பாசக்கார’...
  6. லைஃப்ஸ்டைல்
    நீண்ட நாட்கள் வாழணும்னா.. புரதம் அவசியம் சாப்பிடுங்க..!
  7. வீடியோ
    கேள்விகளால் மடக்கிய பத்திரிகையாளர் | பதில் சொல்ல முடியாமல் திணறிய...
  8. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதிலேயே வயசான தோற்றம்! இதுதான் காரணமா?
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு கடைசி இடம் வேதனை தெரிவித்த கலெக்டர்..!
  10. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...