/* */

பாலக்கோடு அருகே யானை தாக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

பாலக்கோடு அருகே மொரப்பூர் காட்டுப்பகுதியில், யானை தாக்கியதில், விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

பாலக்கோடு அருகே யானை தாக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு
X

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மொரப்பூர் காட்டுப்பகுதி, கரிகுட்டனூர் கிராமத்தை சேர்ந்தவர், தாசப்பன் மகன் முனுசாமி என்கிற எலப்பையன்(68). இவா், காட்டுப்பகுதியில் விறகு சேகரிக்க சென்றுள்ளார். அப்போது, காட்டு யானை தாக்கியதாக தெரிகிறது. இதில், அவரது உடல் பாகங்கள் நசுங்கி சேதமடைந்து, உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

காட்டுப்பகுதியில் முனுசாமி உயிரிழந்து கிடந்ததை பார்த்த சிலா், வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், மாரண்டஅள்ளி காவல்துறைக்கு தகவல் அளித்து சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முனுசாமி, யானை தாக்கி உயிரிழந்தாரா அல்லது வேறு எதாவது காரணமா என விசாரனை செய்து வருகின்றனர்.

Updated On: 14 July 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  4. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  5. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  6. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  7. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  9. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை