Begin typing your search above and press return to search.
கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி: பெண் கைது
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்த பெண் கைது செய்யப்பட்டார்
HIGHLIGHTS
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த கீழ் மொரப்பூர் பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி ரமா செல்வி.
இவர் நேற்று காலை தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தனது உறவினரான ஊராட்சி தலைவர் அம்பிகாவதி செல்வி என்பவர் பொது வழிப்பாதை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பு செய்த பாதையை மீட்டுக் கொடுக்குமாறும் கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயற்சித்தார்.
உடனடியாக அங்கிருந்த போலீசார் அவரை மீட்டனர். தீக்குளிக்க முயற்சி செய்த ரமா செல்வியை நகர காவல் துறையினர் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.