Begin typing your search above and press return to search.
தர்மபுரியில் வேலைக்கு சென்றவர் மாயம்: போலீசார் விசாரணை
தர்மபுரியில் கடந்த 3 நாட்களுக்கு முன் வேலைக்கு சென்றவர் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
HIGHLIGHTS
தர்மபுரி மதிகோன்பாளையம் திருப்பத்தூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் சிகாமணி கூலி தொழிலாளி. இவருக்கு சதீஷ் குமார் வயது 21. என்ற மகனும், நித்தியா வயது 18 என்ற மகளும் உள்ளனர்.
மகன் சதீஷ்குமார் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு ஏ.வி.தியேட்டர் அருகில் உள்ள ஒரு ஆயுள் மோட்டார் சர்வீஸ் கடையில் கடந்த 5 ஆண்டுகளாக வேலை செய்து வந்துள்ளார்.
கடந்த 10ஆம் தேதி வேலைக்கு செல்வதாக சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து தன் மகன் மாயமானது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி தர்மபுரி நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் சப் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.