தர்மபுரி மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நாளை வருகை: கலெக்டர் தகவல்
தமிழக முதல்வர் ஸ்டாலின், தர்மபுரி மாவட்டத்தில் நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக, கலெக்டர் தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
இது தொடர்பாக, கலெக்டர் திவ்யதர்ஷினி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை (30.09.2021) வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மையம் புதிய கட்டடம் மற்றும் இதர துறைகளின் சார்பில் முடிவுற்ற புதிய கட்டடங்களையும் திறந்து வைக்கிறார்.
தர்மபுரி மாவட்டத்தில், 100 % கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்காக ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்களுக்கு விருதுளையும், கர்ப்பிணி தாய்மார்களுக்கு மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகங்களையும் வழங்க உள்ளார். அதனை தொடர்ந்து, ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.
மாலையில், தர்மபுரி மாவட்டம், வத்தல் மலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், மலைவாழ் மக்கள் மற்றும் விவசாயிகளுடன் கலந்துரையாடி, பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.