Begin typing your search above and press return to search.
தர்மபுரி மாவட்டத்தில் ஒப்பந்தகாலம் முடிந்த 6 டாஸ்மாக் பார்களுக்கு சீல்
தர்மபுரி மாவட்டத்தில் ஒப்பந்தகாலம் முடிந்த பின்னரும் இயங்கிய 6 டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம், 68 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில், 22 பார்கள் செயல்பட்டு வந்ததது. இதில், தர்மபுரி நகர் மற்றும் மாவட்டத்தில் இயங்கி வந்த, ஆறு டாஸ்மாக் பார்களின் ஒப்பந்த காலம் கடந்த சில தினங்களுக்கு முடிந்ததது.
ஆனாலும், இவை முறைகேடாக தொடர்ந்து இயங்கி வந்ததை அறிந்த டாஸ்மாக் மேலாளர் மகேஸ்வரி கலால், வருவாய்த்துறையினர், போலீசாருடன் சென்று முறைகேடாக இயக்கிய, ஆறு பார்களுக்கும் சீல் வைத்தார். மேலும், அனுமதியின்றி பார்கள் இயக்கப்பட்டால், போலீசார் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.