ஔவையார் விருது விண்ணப்பிக்க கலெக்டர் அறிவிப்பு
தர்மபுரி மாவட்டத்தில் 2021-22-ஆம் ஆண்டிற்கான ஔவையார் விருதுக்கு தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்க கலெக்டர் அறிவிப்பு
HIGHLIGHTS
பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு 2021-22-ஆம் ஆண்டிற்கான ஔவையார் விருது 08.03.2022 உலக மகளிர் தின விழாவில் முதல்வரால் வழங்கப்படும். இவ்விருதுக்கு ரொக்கப்பரிசு, தங்கப்பதக்கம், சான்று மற்றும் சால்வை வழங்கப்படும்.
மேற்படி விருதுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திகுறிப்பில்,
2022-ம் ஆண்டு ஔவையார் விருது வழங்கும் பொருட்டு கருத்துருக்கள் அனுப்புவதற்கான விதிமுறைகள்:
தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில்; மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுபவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தர்மபுரி மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று கருத்துரு (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்), நிழற்படம்-2 ஆகியவைகளுடன் புத்தக வடிவில் இரண்டு (அசல்-1 மற்றும் நகல்-1) கருத்துக்கள் 27.12.2022க்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், கூடுதல் கட்டடம், மாவட்ட ஆட்சியர் வளாகம், தர்மபுரி மாவட்டம் என்ற முகவரியில் சமர்ப்பிக்குமாறு தெரிவித்துள்ளார்.