Begin typing your search above and press return to search.
நல்லம்பள்ளி அருகே ஐடி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
நல்லம்பள்ளி அருகே ஐடி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
HIGHLIGHTS
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த தாதநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனியரசு (வயது 29). இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
முனியரசு பங்கு சந்தையில் ரூ.12 லட்சம் முதலீடு செய்து இருந்ததாக கூறப்படுகிறது. இதில் தற்போது ரூ.7 லட்சம் எதிர்பாராதவிதமாக இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த முனியரசு, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து வந்த தொப்பூர் போலீசார் முனியரசு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்குபதிவுசெய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.