Begin typing your search above and press return to search.
தர்மபுரி: ஏப்.29ல் முன்னாள் படைவீரர்களின் சிறப்பு குறைதீர் கூட்டம்
தர்மபுரி மாவட்ட முன்னாள் படைவீரர்களின் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 29ம் தேதி நடக்கிறது.
HIGHLIGHTS
தர்மபுரி மாவட்டத்தில், முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் எதிர்வரும் 29.04.2022 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 11 மணிக்கு தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிட கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர் / சார்ந்தோர்கள் தங்களது கோரிக்கை மனுவினை இரட்டை பிரதிகளில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நேரில் சமர்ப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.