மாநில அளவிலான சதுரங்க போட்டியில் தர்மபுரி மாணவர் முதலிடம்
மாநிலங்களுக்கிடையேயான சதுரங்க போட்டியில் தர்மபுரி மாணவர் முதலிடம்; கேடயம் சான்றிதழ் வழங்கல்.
HIGHLIGHTS
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் நடைபெற்ற இரண்டாவது தேசிய ஓபன் ராபிட் சதுரங்கப் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து சதுரங்க வீரர்களான 7 ,9,11,12,16 வயது க்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு ஓபன் சதுரங்க போட்டி நடைபெற்றது.
இதில் தமிழகத்தில் இருந்து தர்மபுரி தனியார் பள்ளியில் படிக்கும் டி.தர்மேஷ் முகுல் ஒன்பது வயதிற்க்குட்பட்ட பிரிவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். இவருக்கு சான்றிதழ் கேடயத்தை பி.சி.ஏ செயலாளர் சுரேஷ் பாபு வழங்கினார்.
மேலும் பெங்களூருவில் 40 வது பி.ஆர்.டி.ஏ ஓபன் ராபிட் சதுரங்கப் போட்டியில் 6 புள்ளிகள் பெற்று நான்கு புள்ளிகள் பெற்று ஆறாவது இடத்தையும், முதல் என்.ஜி.எல்.அகில இந்திய ஓபன் பிடே ராபிட் சதுரங்கப் போட்டியில் 9 க்கு நான்கு புள்ளிகள் பெற்று முதல் என்.ஜி.எல் பிளிட்ச் சதுரங்க போட்டியில் 9 க்கு 5.5 புள்ளிகள் பெற்று ஒன்பது வயது பிரிவில் ஆறாவது இடத்தையும் பிடித்தார்.
2 வயது பி.சி.ஏ.பிரிவில் தமிழ்நாடு மாநிலம் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த டி.தர்மேஷ்முகுல் முதலிடத்தை பிடித்தார். அவருக்கு பிசிஏ செயலாளர் ரமேஷ் பாபு தங்கப் கேடயம், சான்றிதழையும் வழங்கினார்.