மழைக்கு தாக்குப்பிடிக்காத கால்வாய் - 4 ரோடு முழுவதும் சாக்கடை நீர்
தர்மபுரியில், அரை மணி நேர மழைக்கே தாக்கு பிடிக்காத கால்வாய்களால், 4 ரோடு முழுவதும் சாக்கடை தண்ணீர் வழிந்தோடியது.
HIGHLIGHTS
தர்மபுரி மாவட்டத்தில், திங்கட்கிழமை பரவலாக மழை பெய்தது. தர்மபுரி நகரப் பகுதியில் சுமார் அரை மணி நேரம் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக தர்மபுரி பேருந்து நிலையம் அருகே, 4 ரோடு பகுதியில் மழை நீருடன் சாக்கடை தண்ணீரும் கலந்து ஆறாக ஓடியது.
இதனால் 4ரோடு பகுதியில் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சாக்கடை தண்ணீரிலே நடந்து சென்றன. சாலை ஓரங்களில் உள்ள சாக்கடை கால்வாய் மற்றும் மழைநீர் கால்வாய்களை, நகராட்சி நிர்வாகம் முறையாக தூர்வாரததால் சாக்கடையில் பிளாஸ்டிக் குப்பைகள் தேங்கி அடைப்பு ஏற்பட்டு. கழிவுநீர் கால்வாய் தண்ணீரும் மழைநீரும் சேர்ந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.
அரை மணி நேரம் பெய்த மழை மழையால் சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக சாலையில் சாக்கடை நீரும் மழை நீரும் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். சாக்கடை அடைப்புகளை தூர்வாரி சரி செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர்.