புதிய பள்ளிகள் துவங்க பள்ளிக்கல்வி துறை அமைச்சரிடம் தர்மபுரி எம்எல்ஏ மனு
புதிய பள்ளிகள் துவக்கவும், பள்ளிகளை தரம் உயர்தவும் பள்ளிக்கல்வி துறை அமைச்சரிடம் தர்மபுரி எம்எல்ஏ வெங்கடேஷ்வரன் மனு.
HIGHLIGHTS
பள்ளிக்கல்வித்துறை சார்பில் மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தர்மபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஷ்வரன் கலந்துக் கொண்டு தர்மபுரி எம்எல்ஏ தொகுதி, நல்லம்பள்ளி யூனியனுக்குட்பட்ட மானியதஅள்ளி பஞ்சாயத்து, சேசம்பட்டியான்கொட்டாய் கிராமத்தில் புதிய தொடக்கப்பள்ளி துவங்குதல். சாமிசெட்டிப்பட்டி பஞ்சாயத்து, சாமிசெட்டிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தல், கம்மம்பட்டி பஞ்சாயத்து, புக்கம்பட்டியான்காட்டுவளவு அரசு நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தல், பாலவாடி பஞ்சாயத்து, பாலவாடி அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தல், தின்னஅள்ளி பஞ்சாயத்து கொமத்தம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தல், தர்மபுரி யனியன், இலக்கியம்பட்டி பஞ்சாயத்து, இலக்கியம்பட்டி மகளிர் அரசு நடுநிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தல் போன்றவற்றை கிராமப்புற ஏழை மாணவர்களின் நலன் கருதி உடனடியாக நிறைவேற்றி தர பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி யிடம் கோரிக்கை மனுவினை அளித்து தர்மபுரி எம்எல்ஏ பேசினார்.