தருமபுரி - மார்க்சிஸ்ட் சார்பில் கொரோனா உதவி மையம் துவக்கம்!
தருமபுரி மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கென, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொரோனா உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
இது பற்றி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தருமபுரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 2ம் அலை தீவிரமாக உள்ளது. கொரானா நோய் பாதிப்பில் இருந்து மக்களை காத்திடவும், அவர்களுக்கு உரிய சிகிச்சைகள் கிடைக்க உதவும் வகையில், கொரோனா உதவி மையத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, தருமபுரி மாவட்டத்தில் துவங்கியுள்ளது.
தருமபுரி செங்கொடிபுரத்தில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் இருந்து இம்மையம் செயல்படும். கொரானா நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள நபர்களுக்கு தெரிவித்து சிகிச்சைகள் கிடைக்கவும், ஆக்சிஜன், ஸ்கேன் மையம் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவற்றை ஏற்பாடு செய்து தரப்படும்.
உரிய ஆலோசனைகள் வழங்கவும் மருத்துவமனைகளில் படுக்கை வசதி நிலவரங்களை அறிந்து மக்களுக்கு தெரிவித்து சேர்க்கைக்கு உதவிடும் வகையில் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளை 14 பேர் கொண்ட குழு ஒருங்கிணைத்து செயல்படும்.
சிபிஎம் தருமபுரி கோவிட்-19 உதவி மையத்தை கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்:-
94435 34551
94430 56709
81100 36895
76959 41760
94885 88823
98426 83344
98659 14534
98420 50156
98429 91522
89035 07399
94435 13945
94880 76791
72000 76111
85259 80836