/* */

தர்மபுரி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தர்மபுரி நகர பேருந்து நிலைய ஆக்கிரமிப்பு பற்றி பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

HIGHLIGHTS

தர்மபுரி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை
X

வியாபாரிகளால் ஆக்ரமிப்பு செய்யப்பட்டுள்ள தர்மபுரி நகர பேருந்து நிலையம் 

தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட நகர் பேருந்து நிலையத்தை பூ வியாபாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளின் ஆக்கிரமிப்பால் பேருந்துக்காக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் வெட்ட வெளியில் காத்திருக்க வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

தர்மபுரி நகராட்சி உட்பட்ட பகுதியில் புறநகர் பேருந்து நிலையம், நகர பேருந்து நிலையம் என்று தனித்தனியாக இயங்கி வருகிறது. இதில் நகர பேருந்து நிலையம் காலை 8 மணி முதல் 9.30 மணி வரை பரப்பரப்பாக காணப்படும்.

தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரம், காரிமங்கலம், தொப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து தர்மபுரி நகரப் பகுதிக்கு அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வெளியூருக்கு பயணம் செல்லும் பயணிகள் என்று பல்வேறு தரப்பினர் நகரப் பேருந்தில் பயணம் செய்து நகர பேருந்து நிலையத்தை வந்து அடைகின்றனர்.

நகர் பேருந்து நிலையத்திலிருந்து தர்மபுரி அரசு கலைக் கல்லூரி, காரிமங்கலம் அரசு மகளிர் கலைக் கல்லூரி, மாட்டிலாம் பட்டியில் உள்ள சட்டக் கல்லூரி, செட்டி கரை அரசு பொறியியல் கல்லூரி, பைசுஅள்ளியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி, கடகத்தூர் பகுதியில் உள்ள தொழில் பயிற்சி கல்லூரி, செட்டிகரையில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளி உள்ளிட்ட பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் இங்கிருந்து பேருந்தில் ஏறி பள்ளி கல்லூரிக்கு செல்கின்றனர்.

இவ்வாறு இருக்கையில் தர்மபுரி மாவட்டத்தில் கிராமப் பகுதிகளிலிருந்து விவசாயிகள் கொண்டு வரும் பூக்களை நகர பேருந்து நிலையத்தில் வியாபாரிகள் பெற்று வியாபாரம் செய்து வருகின்றனர். இதன் காரணமாக பூ வியாபாரிகள் பேருந்து நிலையத்தில் பயணிகள் நிற்பதற்காக அமைக்கப்பட்ட நடைமேடை மற்றும் பேருந்து நிறுத்துமிடம் என பகுதிகளை முழுவதையும் ஆக்கிரமிப்பு செய்து வியாபாரம் செய்து வருவதால் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் நிற்பதற்கு கூட இடமின்றி வெட்ட வெளியில் நின்று அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதன் காரணமாக மழையோ, வெயிலோ அதிகமாக இருக்கும் காலங்களில் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து கல்லூரி மாணவ, மாணவிகள் சிலர் கூறுகையில், தர்மபுரி நகர பேருந்து நிலைய ஆக்கிரமிப்பு பற்றி பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தர்மபுரி மாவட்டத்தில் கிராமங்களில் இருந்து வரும் நகரப் பேருந்துகள் உள்ளே நுழைவதற்கே இடம் இன்றி ஊர்ந்து செல்கிறது. மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் தனியார் நிறுவன ஊழியர்கள், அரசு ஊழியர்கள், நகரப் பகுதியை நோக்கி வரும் பயணிகள் அனைவரும் பேருந்தில் இருந்து இறங்குவதற்கு வழி இன்றி தவித்து வருகின்றனர்.

மேலும் நகர பேருந்து நிலையத்திலிருந்து பள்ளி, கல்லூரி செல்வதற்கு பேருந்துக்காக காத்திருக்கும் போது மாணவ, மாணவிகள் நிற்பதற்கு இடமின்றி தவித்து வருகின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

நகர பேருந்து நிலையத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பூ வியாபாரம் செய்வதற்கு பூ வியாபாரிகளுக்கு தனி இடம் ஒதுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 31 July 2023 11:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’