/* */

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி விடுதியில் ராகிங் செய்த 4 மாணவர்கள் மீது வழக்கு

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி விடுதியில் ராகிங் செய்த 4 மருத்துவ மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

HIGHLIGHTS

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி விடுதியில் ராகிங் செய்த 4  மாணவர்கள் மீது வழக்கு
X

தர்மபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள விடுதியில் மாணவ மாணவியர்கள் என 500 பேர் தங்கி பயின்று வருகின்றனர்.

கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு மூன்றாம் ஆண்டு படிக்கும் நான்கு மாணவர்கள் , இரண்டாம் ஆண்டு படிக்கும் ஒரு சில மாணவர்களை ராக்கிங் செய்துள்ளனர்.

குறிப்பாக உள்ளூர் மாணவர்கள் வெளியூரிலிருந்து வந்து தங்கி படிக்கும் மாணவர்களை அதிகளவில் கிண்டல் கேலி செய்துள்ளனர். இதில் நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் சேர்ந்த சரவணன் என்பவரை 4 மாணவர்கள் சேர்ந்து கொண்டு முட்டிபோடவைத்தும், சிகரெட் வாங்கி வரச்சொல்லி யும், டார்ச்சர் செய்துள்ளனர். இதில் மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் விடுதி காப்பாளர், உதவி காப்பாளர் ஆகியோரிடம் தெரிவித்தனர்.

ஆனால் ராகிங் செய்த மாணவர்கள் தர்மபுரி நகர பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் விடுதி காப்பாளர்கள் அதனை மூடி மறைத்து உள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோல் தொடர்ந்து அடிக்கடி மாணவனை தொந்தரவு செய்ததால் மனமுடைந்த மாணவன் கடந்த 5ம் தேதி பிற்பகல் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரையை சாப்பிட்டும், இடது கையை அறுத்துக் கொண்டும் தற்கொலைக்கு முயற்சித்தார்.

உடனடியாக சகமாணவர்கள் அருகில் இருந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அந்த மாணவனை மருத்துவர்கள் பரிசோதனை செய்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தனா்.

இதுகுறித்து சரவணனின் பெற்றோர் கூறும்போது, கடந்த 23ம் தேதி கல்லூரி விடுதியில் தருமபுரியை சேர்ந்த மாணவர்கள் 3ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் 2ம் ஆண்டு மாணவர்களுக்கும் ஒரு சில பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. இதில், 3ம் ஆண்டு மாணவர்கள் எனது மகனை அடித்து விட்டார்கள். இந்த பிரச்சனையில் கல்லூரி நிர்வாகத்தின் செயல்பாடுகளின் குளறுபடியால் எனது மகன் தற்போது பிரச்சனையில் சிக்கியிருக்கிறார்.

கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதாக கூறிக்கொண்டே இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நிர்வாகத்தின் அணுகுமுறை வேறு மாதிரி இருந்ததால், மருத்துவக் கல்லூரி நிர்வாகம் உள்ளூர் மாணவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதால் மற்ற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். அதனாலே என்னுடைய மகன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்

கல்லூரி விடுதியில் மாணவர்கள் ஒரு சிலர் மது அருந்தியிருந்து கல்லூரி காப்பாளர் அனைவருக்கும் தெரிந்தே இது நடந்திருக்கிறது.

சீனியர் மாணவர்கள் தனது மகனை இரவு 12 மணி அளவில் சிகரெட் வாங்கி கொண்டு வர சொல்லி மிரட்டியதால், அவன் மறுக்கவே அவனை வேறு ஒரு அறைக்கு தூக்கிச் சென்று மது பாட்டிலால் கழுத்தில் வைத்து குரல்வளையை நெரித்து இருக்கிறார்கள். இதனால் குரல் வளை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இதுகுறித்து மாவட்ட காவல்துறை, மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் ராக்கிங் எடுப்பது குறித்தும், அதனால் சில மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருவது குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மருத்துவ கல்லூரி முதல்வர் முதல்வரிடம் அறிவுறுத்தி உள்ளனர்.

இதனையடுத்து ராகிங் செய்த 4 மாணவா்களையும் மருத்துவக்கல்லூாி நிா்வாகம் இடைநீக்கம் செய்தது. அதனையடுத்து பெற்றோா் மற்றும் கல்லூாி முதல்வா் புகாாின் போில் 4 மாணவா்கள் மீது தர்மபுாி நகர காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

Updated On: 12 Dec 2021 7:45 AM GMT

Related News