Begin typing your search above and press return to search.
தர்மபுரி நகைக் கடையில் கொள்ளை முயற்சி: போலீசார் விசாரணை
தர்மபுரி நகைக் கடையில் ஷட்டர் உடைக்கப்பட்டு கொள்ளை அடிக்க முயற்சித்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
HIGHLIGHTS
தர்மபுரி நகரம் ஆறுமுக ஆசாரி தெருவில் சத்தியா பேரடைஸ் எனும் பெயரில் நகைக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் உரிமையாளர் சத்தியமூர்த்தி வயது 58.
இவர் கடந்த 15ஆம் தேதி கடையை பூட்டி விட்டு விட்டு சென்றார். மீண்டும் நேற்று கடைக்குச் சென்று பார்க்கும்போது கடையில் இரும்பு ஷட்டர் உடைக்கப்பட்டு கொள்ளை அடிக்க மர்ம நபர்கள் முயற்சி செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து இதில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தர்மபுரி டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.