Begin typing your search above and press return to search.
தர்மபுரி மாவட்டத்தில் தடையை மீறி பட்டாசு வெடித்த 66 பேர் மீது வழக்கு
தர்மபுரி மாவட்டத்தில் தடையை மீறி பட்டாசு வெடித்த 66 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
HIGHLIGHTS
தர்மபுரி மாவட்டம், தர்மபுரி, அரூர், பென்னாகரம், பாலக்கோடு ஆகிய நான்கு போலீஸ் சப்-டிவிஷன்களிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. கலைச்செல்வன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அதன்படி நீதிமன்ற உத்தரவின்படி குறிப்பிட்ட நேரத்தில் பட்டாசு வெடிக்க அனுமதி அளித்திருந்தது. இதனை மீறி நேரம் காலம் கருதாமல் மக்களின் விருப்பத்திற்கு இணங்க அதிக சத்தத்துடன் கூடிய பட்டாசு வெடித்து வந்தனர்.
இதனையடுத்து மாவட்டத்தில் உள்ள காவல் நிலைய எல்லை பகுதியில் உள்ள நகர்புறங்களில், கிராமங்களில் பட்டாசுகள் வெடித்த 66 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.