/* */

கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றிய சேர்மன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்

கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றிய சேர்மன் மீது விருத்தாசலம் கோட்டாட்சியரிடம் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொடுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றிய சேர்மன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்
X

நல்லூர் ஒன்றிய தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கோட்டாட்சியரிடம் கொடுக்கப்பட்டது.

கடலூர் மாவட்டம், நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் அ.தி.மு.க. 6 ஒன்றியக் குழு உறுப்பினர்களும், தி.மு.க. 7 ஒன்றிய குழு உறுப்பினர்களும், பா.ம.க. 2 ஒன்றிய குழு உறுப்பினர்களும் சுயேட்சையாக 5 ஒன்றிய குழு உறுப்பினர்களும் , வி.சி.க.1, என மொத்தம் 21 ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது வெற்றி பெற்றனர் .

இந்நிலையில்,அ.தி.மு..க மற்றும் சுயேட்சை உள்ளிட்ட ஒன்றியக் குழு உறுப்பினர்களின் ஆதரவுடன் கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது ஒன்றிய சேர்மனாக பா.ம.க கவைச் சேர்ந்த செல்வி ஆடியபாதம் தலைவராகவும், அ.தி.மு.க.வை சேர்ந்த ஜான்சிமேரி தங்கராசன் ஒன்றிய குழு துணை தலைவராகவும் தேர்ந்தெடுக்கபட்டனர்.

ஒன்றிய குழு தலைவர் செல்வி ஆடியபாதம் ,வட்டார வளர்ச்சி அலுவலர் இருவரும் ஒன்றியக் குழு உறுப்பினர்களுக்கு இரண்டு ஆண்டுகளாக அரசு நிதிகளை பிரித்துக் கொடுக்காமல் தன்னிச்சையாக செயல்படுவதை கண்டித்து, ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் செல்வி ஆடியபாதம் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றவும், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கூட்டத்தை கூட்ட கோரி வேப்பூர் கவுன்சிலர் முத்துக்கண்ணு தலைமையில் 15 கவுன்சிலர்கள் கூட்டாக ஒன்று சேர்ந்து நம்பிக்கையில்லா தீர்மான கூட்டத்தை உடனடியாக கூட்ட வலியுறுத்தி கோட்டாட்சியர் ராம்குமாரிடம் மனு அளித்தனர்.

Updated On: 24 Dec 2021 1:01 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  2. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  3. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  4. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  5. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  8. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  9. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  10. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு