சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்த 63 வயது முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
HIGHLIGHTS
கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த அகரம் பகுதியை சேர்ந்த 63 வயது முதியவர் தேசிங்கு இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் மற்றும் பேரன் பேத்திகள் உள்ளனர். இந்நிலையில் இவர் கடந்த 2019ஆம் ஆண்டு மூன்று வயது குழந்தையின் பெற்றோர் வேலைக்கு சென்ற நேரத்தில் பாட்டியுடன் தனியாக இருந்த 3 வயது பெண் குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவல்துறையினர் தேசிங்கு மீது போக்சோ வழக்கு பதிவு செய்து இந்த வழக்கு விசாரணை கடலூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று குற்றம்சாட்டப்பட்ட தேசிங்கு குற்றவாளி என உறுதி செய்த நீதிபதி எழிலரசி, குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் 4 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு இழப்பீடு தொகையாக ஐந்து லட்ச ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டார்.