Begin typing your search above and press return to search.
கடலூரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க. சார்பில் நிவாரணம்
கடலூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க. சார்பில் 5 கிலோ அரிசி நிவாரணமாக வழங்கப்பட்டது.
HIGHLIGHTS
கடலூர் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையின் காரணமாக கடலூர் நகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் பலர் வீடு,உடமைகள் இன்றி தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அ.தி.மு.க. சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. கடலூர் முதுநகர் 38 வது வார்டு பகுதியில் அ.தி.மு.க. நகர கழக துணைச் செயலாளரும், முன்னாள் நகரமன்ற உறுப்பினருமான கந்தன் பொதுமக்களுக்கு 5 கிலோ அரிசி வீதம் 250 குடும்பங்களுக்கு வழங்கினார்.