/* */

தி.மு.க. வெற்றி பற்றி அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் பேட்டி

நகர்ப்புற தேர்தலில் பெற்ற வெற்றி முதல் அமைச்சரின் 9 மாத உழைப்பிற்கு கிடைத்த பரிசு என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் கூறினார்.

HIGHLIGHTS

தி.மு.க. வெற்றி பற்றி அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் பேட்டி
X

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பேட்டி அளித்தார்.

கடலூர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சி, 14 பேரூராட்சி என தி.மு.க. அனைத்தையும் கைப்பற்றிய நிலையில் கடலூர் தி.மு.க. அலுவலகத்தில் மாநகராட்சி சார்பில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர்களை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மாமன்ற உறுப்பினர்கள் எப்படி செயல்பட வேண்டும் என அறிவுரை கூறிய அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தர்மபுரி மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ள நிலையில். அவர் கூறுகையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் தர்மபுரி மாவட்டத்தில் ஒரு தொகுதியை கூட தி.மு.க. கைப்பற்ற முடியாத நிலை ஏற்பட்டதாகவும் ஆனால் தற்போது நகராட்சி மற்றும் பேரூராட்சி அனைத்தையும் தி.மு.க. கைப்பற்றி உள்ளது என்றார்.

அதற்கு காரணம் தமிழக முதல்வரின் 9 மாத ஓய்வில்லாத உழைப்பு தான் என தெரிவித்த அவர் தர்மபுரி மாவட்டத்திற்கு என எண்ணற்ற திட்டங்களை தமிழக முதல்வர் கொண்டு வந்துள்ளதாகவும் அதன் காரணமாக அவர் மீது உள்ள நம்பிக்கையில் பொதுமக்கள் தற்போது முழு அளவில் வெற்றியைக் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேபோல் பத்தாண்டு காலம் கடலூர் மாவட்டத்தில் அமைச்சராக இருந்த தொழில்துறை அமைச்சர் எதுவும் செய்யாத நிலையில் பல்வேறு தொழிற்சாலைகள் கடலூர் மாவட்டத்திற்கு கொண்டு வரப்படும் என்ற நம்பிக்கையிலும் கடலூர் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் மீது உள்ள நம்பிக்கையில் பொதுமக்கள் வாய்ப்பு அளித்துள்ளதாகவும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பொது மக்களுக்கு அனைத்து திட்டங்களும் கொண்டுவருவதற்கு உறுதுணையாக இருப்போம் என்றார்.

Updated On: 23 Feb 2022 1:19 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!