/* */

‘கோவையில் பாஜகவின் வெற்றி என்பது காலத்தால் எழுதப்பட்ட விதி’- அண்ணாமலை

‘கோவையில் பாஜகவின் வெற்றி என்பது காலத்தால் எழுதப்பட்ட விதி’- vஎன அண்ணாமலை கூறி உள்ளார்.

HIGHLIGHTS

‘கோவையில் பாஜகவின் வெற்றி என்பது காலத்தால் எழுதப்பட்ட விதி’- அண்ணாமலை
X

தேர்தல் பிரச்சாரத்தில் அண்ணாமலை.

கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை, ஹோப்காலேஜ் அருகேயுள்ள பாலன் நகர் பகுதியில் இறுதிக்கட்ட பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

50 ஆண்டுகளுக்கு பிறகு அரசியல் வரலாறு எழுதும் போது, நரேந்திர மோடி ஆட்சிக்கு முன்பு, நரேந்திர மோடி ஆட்சிக்கு பின்பு என்று தான் எழுத முடியும். 2019 ல் கொடுக்கப்பட்ட 295 வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளோம். திமுக அளித்த ஒரு வாக்குறுதிகளைகளை கூட நிறைவேற்றவில்லை. உலகத் தலைவனுக்கு எல்லாம் தலைவனாக மோடி நின்று கொண்டிருக்கிறார். மற்ற மாநிலங்களில் எந்த தங்கு தடையின்றி மோடிக்கு வாக்கு வந்து விடுகிறது. ஆனால் மோடிக்கு வாக்கு வர தமிழகத்தில் பல பிம்பங்களை உடைக்க வேண்டியுள்ளது. ஜூன் 4 க்கு பின்பு திராவிட அரசியலை தாண்டிய புதிய அரசியல் வர இருக்கிறது.

பாஜக தொண்டர்களும், அரசியல் தொடர்பு இல்லாத தன்னார்வலர்கள் கடுமையாக உழைத்து இருக்கிறார்கள். எதிர்கட்சிகளை எங்கும் பார்க்க முடியவில்லை. கரெண்ட்டை ஆப் செய்து 500 ரூபாய் தருகிறார்கள். கோவையில் 1000, 500, 250 என ஒரு சுற்றுப் பணம் தந்து விட்டார்கள். இதை பாஜக உடைக்கும். ஜூன் 4க்கு பிறகு கோயம்புத்தூர் பார்முலாவை உலகம் முழுவதும் பேசுவார்கள். எவ்வளவு பணம் கொட்டினாலும் நீதியின் பக்கம் கோவை மக்கள் இருப்பார்கள். மாற்றான் தாய் மனப்பான்மையுடன் தான் திமுக கோவையை பார்த்து கொண்டிருக்கிறது. கோவைக்கு அரசு பட்ஜெட்டில் எதுவும் இருக்காது. கோவைக்கான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை. 33 மாதங்களாக முதலமைச்சர், அமைச்சர்கள் வேலை செய்யவில்லை. பாராளுமன்ற உறுப்பினருக்கு ஓட்டு போட்டால், வேலை செய்கிறோம் என தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருப்பது வெட்கக்கேடானது.

100 வாக்குறுதிகளை மத்திய அரசிடம் இருந்து பெற்று 500 நாட்களில் நிறைவேற்றுவோம். இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என இதுவரை சொல்லவில்லை. 2004 ல் ராஜ்யசபாவில் இருந்த மன்மோகன் சிங்கை பிரதமராக்கியது உலக வரலாற்றில் மோசமான ஐந்து பிழைகளில் ஒன்று. அதன் பிறகு காங்கிரஸ் ஆட்சியில் 12 இலட்சம் கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.

வயநாட்டில் ராகுல்காந்தியை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி. பக்கத்து பக்கத்து மாநிலங்களில் கூட ஒன்றாக இல்லாத இவர்கள் எப்படி நாட்டை ஆள முடியும்? எந்த தைரியத்தில் மக்களை பார்த்து ஓட்டு போடுங்கள் என கேட்கிறார்கள்? கட்சியை தாண்டி ஓட்டு போட வேண்டிய தேர்தல் இது. கட்சி, மதம், சாதி எதுவும் தேவையில்லை. மோடியை பார்த்து ஓட்டு போடப்பட வேண்டிய தேர்தல். மோடிக்கு நிகர் மோடி மட்டுமே, அவருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்த முடியாது. இரண்டாம் கட்ட தேர்தலுக்கு பிறகு இண்டியா கூட்டணியே இருக்காது.

5 ஆண்டுகளாக இருந்த கம்யூனிஸ்ட் எம்.பி. எந்த வேலையும் செய்யாமல், வளர்ச்சியை எல்லாம் தடுத்துள்ளார். 15 நாட்களுக்கு ஒருமுறை தான் தண்ணீர் வருகிறது. சாலைகள் எல்லாம் குழிகளாக உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு பிரதமர் மோடி பணம் கொடுத்தும், கோவை ஸ்மார்ட் ஆகவில்லை. செந்தில் பாலாஜி கைதான பிறகு, மேயர் ஆவணங்களை கொளுத்திக் கொண்டிருந்தார். கோவையில் முழுமையாக அரசு இயந்திரம் செயலிழந்து உள்ளது. இந்த நகரத்தை மறுகட்டமைப்பு செய்ய வேண்டியுள்ளது. கோவையில் எங்கு திரும்பி பார்த்தாலும் கஞ்சா, அபின், போதை வஸ்துகள் இருக்கின்றன. மத்திய அரசின் போதைப்பொருள் தடுப்பு பிரிவை கொண்டு வருவோம். தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தை கொண்டு வருவோம். கோவை குண்டு வெடிப்பு சம்பவம் நடந்து 26 ஆண்டுகள் கழித்தும் கோவை மீளவில்லை. தீபாவாளிக்கு முன்பு நடந்த தீவிரவாத தாக்குதலை முதலமைச்சர் சிலிண்டர் வெடிப்பு என்கிறார். அடுத்த தாக்குதல் எப்போது நடக்கும் எனத் தெரியாது? கோவையை காப்பது பாராளுமன்ற உறுப்பினரின் கடமை. கோவைக்கு என்.ஐ.ஏ. அலுவலகம் வருவது உறுதி. தேசத்திற்கு எதிராக சதி செய்பவர்களை உள்ளே போட வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தல் யார் பிரதமராக வர வேண்டும் என்பதை முடிவு செய்யும் தேர்தல். பிரதமராக மோடி தான் வருவார் என மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். திமுக, அதிமுக இவ்வளவு பணம் கொடுக்கிறது என்பதை பற்றி எங்களுக்கு கவலையில்லை. கோவையில் 60 சதவீத வாக்குகளை தேசிய ஜனநாயக கூட்டணி வாங்கும். பிரச்சனைகளுக்கு தீர்வு காண நாங்கள் இருக்கிறோம். மற்ற இரண்டு கட்சிகளும் பிரச்சனையை உருவாக்க நின்று கொண்டிருக்கிறார்கள்.

டிஆர்பி ராஜா ஆட்டை பிரியாணி போட்டு விடுவோம் என தரம் தாழ்ந்து பேசுகிறார். இது தான் திமுகவின் வழக்கு மொழி. கோவையில் பாஜகவின் வெற்றி என்பது காலத்தால் எழுதப்பட்ட விதி. கட்சியை பார்த்து ஓட்டு போடாமல், குழந்தைகளின் எதிர்காலத்தை பார்த்து ஓட்டு போட வேண்டும். 25 ஆண்டுகளுக்கு பிறகு கோவை இந்தியாவின் முதன்மை நகரமாக இருக்க வேண்டும். அதை பாஜகவால் தான் செய்ய முடியும். அண்ணாமலையை பாராளுமன்ற உறுப்பினராக கொண்டு வந்தால் மாற்றம் நடக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 17 April 2024 9:06 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!