Begin typing your search above and press return to search.
கோவை மாநகர்கவுண்டம்பாளையம்கிணத்துக்கடவுமேட்டுப்பாளையம்பொள்ளாச்சிசிங்காநல்லூர்சூலூர்தொண்டாமுத்தூர்வால்பாறை
நிரம்பி வழியும் ஆழியார் அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
ஆழியார் அணையில் இருந்து 7 மதகுகள் வழியாக 1,050 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆழியார் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஆழியார் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வந்தது.
இந்நிலையில் நேற்றிரவு முதல் ஆழியார் அணை நிரம்பி வழிந்து வருகிறது. இதையடுத்து இன்று 7 மதகுகளில் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கரையோரப் பகுதியில் வசிக்கக் கூடிய மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி ஆழியார் அணையில் இருந்து 7 மதகுகள் வழியாக 1,050 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டியுள்ளது. உபரிநீர் திறப்பால் ஆழியார் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.