/* */

கேரளாவுக்கு கடத்த இருந்த 3 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 405 கிலோ குட்காவையும், கடத்தலுக்கு பயன்படுத்திய டாடா ஏஸ் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

கேரளாவுக்கு கடத்த இருந்த 3 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்
X

குட்கா உடன் கைது செய்யப்பட்ட ஜவகர்.

கோவையை அடுத்த செட்டிபாளையம் பைபாஸ் ரோடு அருகே இருந்து டாடா ஏஸ் வாகனம் மூலம் அதிகளவிலான குட்கா கேரளாவுக்கு கடத்தி செல்ல இருப்பதாக பொள்ளாச்சி சிறப்பு தனிப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கோவை மாவட்டம் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில், பொள்ளாச்சி துணைக் கண்காணிப்பாளர் செல்வி தமிழ்மணி அறிவுறுத்தலின்படி சிறப்பு தனிப்பிரிவு போலீசார் பாலக்காடு ரோட்டில் தீவிர வாகன கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த டாடா ஏஸ் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா இருப்பது தெரியவந்தது. 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 405 கிலோ குட்காவையும், கடத்தலுக்கு பயன்படுத்திய டாடா ஏஸ் வாகனத்தை பறிமுதல் செய்த சிறப்பு தனிப்பிரிவு போலீசார், குட்கா கடத்தி வந்த மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்த ஜவகர் என்கிற சபரீசன் என்பவரை கைது செய்தனர். டெம்போ டிரைவர் மற்றும் உரிமையாளரான சபரீசனையும், குட்காவையும் சிறப்பு தனிப்பிரிவு போலீசார் மேற்கு போலீசில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 11 March 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  2. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  3. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  4. வீடியோ
    ஜின்னாவின் பிளவு மனப்பான்மையில் பயணிக்கும்...
  5. தொழில்நுட்பம்
    எச்.எம்.டி பல்ஸ்: சுயமாக சரிசெய்யும் ஸ்மார்ட்போன்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  7. ஈரோடு
    தாளவாடி அருகே வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய ஆண் சிறுத்தை
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா
  9. சினிமா
    உண்டா: யதார்த்தத்தின் அழுத்தமான பிரதிபலிப்பு!
  10. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...