/* */

காட்டு யானை தாக்கி வாட்சர் பலி

கோவை சிறுவானி மலையடிவார பகுதியில், காட்டு யானை தாக்கியதால், வாட்சர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

காட்டு யானை தாக்கி வாட்சர் பலி
X

கோவை, சிறுவானி அருகே காட்டு யானை தாக்கியதால், வாட்சர் உயிரிழந்தார்.

கோவை மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுவானி மலையடிவாரம் சாடிவயல், சிங்கம்பதி கிராமங்கள் உள்ளது. அதன் சுற்று வட்டார கிராமங்களில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். இந்த வனப்பகுதிகளில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகமாக காணப்படுகின்றன. அவ்வப்போது காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்துகின்றன. இதனால் சில நேரங்களில் மனித - வனவிலங்கு மோதல் ஏற்படுகிறது.

சிங்கம்பதி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவர் தமிழக சுற்றுலா துறையில் வாட்சர் பணி செய்தார். இன்று காலை, தனது வீட்டில் பின்புறம் உள்ள கழிவறைக்கு சென்றார். அப்போது அங்கு நின்றிருந்த காட்டு யானை திடீரென, முருகனை தாக்கியது.

இதில் அவர் படுகாயமடைந்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த மக்கள், காட்டு யானையை கூச்சலிட்டு விரட்டினர். படுகாயமடைந்த முருகன், கோவை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி முருகன் உயிரிழந்தார்.

Updated On: 12 Aug 2022 6:09 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ஆனங்கூர் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பால்குட ஊர்வலத்தில்...
  2. நாமக்கல்
    ப.வேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
  3. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  4. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. ஈரோடு
    சத்தியமங்கலத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச்...
  7. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  8. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  10. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...