/* */

ஆதார் கார்டில் பெயரை மாற்ற அலைக்கழிப்பதாக பொதுமக்கள் புகார்

ஆதாரில் பெயர் திருத்தம் செய்ய, அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாக, புகார் எழுந்துள்ளது.

HIGHLIGHTS

ஆதார் கார்டில் பெயரை மாற்ற  அலைக்கழிப்பதாக பொதுமக்கள் புகார்
X

ஆதார் கார்டு திருத்தம் செய்ய, அன்னூர் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் பொதுமக்கள்.

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், ஆதார் கார்டில் பெயரில் பிழைகளை திருத்த, முகவரி மாற்றம் செய்ய, அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். அங்கு தினமும் காலை 100 க்கும் மேற்பட்டோர், இதற்காக வருகின்றனர்.

ஆனால், அங்கு 50 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படுவதாகவும், மீதம் இருப்பவர்களை அடுத்த நாள் வாருங்கள் என்று சொல்லி, திரும்பி அனுப்பி விடுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஆதார் கார்டு பதிவு செய்யும் பணியில் உள்ள நபர்கள், தங்களுக்கு தெரிந்த நபர்களுக்கு டோக்கன்கள் இல்லாமல், ஆதார் கார்டில் பிழை திருத்தி தருவதாகவும், தினசரி அங்கு வரும் பொதுமக்களை அலைக்கழிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

எனவே, அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதார் கார்டு தொடர்பான பணிகளை வேகப்படுத்த, கோவை மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; மேலும் இ-சேவை மையங்கள் மற்றும் இதர இடங்களில் இதற்க்முகாம்கள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 14 July 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  2. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  4. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  5. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  7. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  8. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  9. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  10. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு