/* */

சிமெண்ட் ஆலை சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

Private Cement Goods train Derails

HIGHLIGHTS

சிமெண்ட் ஆலை சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து
X

கோயமுத்துார் மதுக்கரை பகுதியில் தனியார் சிமெண்ட் ஆலை பயன்பாட்டிற்கான சரக்கு இரயில் மீண்டும் தடம் புரண்டது.

கோவையை அடுத்த மதுக்கரை பகுதியில் தனியார் சிமெண்ட் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு 1000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதன் ஆலை நிர்வாகம் அமைந்துள்ள பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த சிமெண்ட் தொழிற்சாலையில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு சிமெண்ட் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இன்று காலை க்ளிங்கர் ஏற்றி வந்த சரக்கு ரயில், இரண்டு கேட்டுகளை உடைத்தெறிந்து விட்டு மயில்சாமி என்பவரின் தோப்பிற்குள்ளே சரிந்து விழுந்தது. கடந்த வாரம் இதே போல் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்ட நிலையில் மீண்டும் இன்று ரயில் தடம் புரண்டுள்ளது.

சிமெண்ட் ஆலை நிர்வாகம் முறையான பராமரிப்பு செய்யாததே அடிக்கடி விபத்து ஏற்பட காரணமென அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். மேலும் இந்த பாதை வழியாக துப்புரவு பணியாளர்கள் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் அதிகாலை இந்த சம்பவம் நிகழ்ந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். ஆலை நிர்வாகம் தொடர் விபத்துகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Updated On: 13 March 2021 10:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  3. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  4. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  5. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  6. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  7. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  8. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்