/* */

அதிக கட்டணம்: கோவையில் மருத்துவமனையின் சிகிச்சை உரிமம் ரத்து

கோவையில், அதிக கட்டணம் வசூலித்த புகாரில், தனியார் மருத்துவமனையின் சிகிச்சை உரிமம் ரத்து செய்யப்பட்டது.

HIGHLIGHTS

அதிக கட்டணம்: கோவையில் மருத்துவமனையின்  சிகிச்சை உரிமம் ரத்து
X

கோவை சரவணம்பட்டியை சேர்ந்த நோயாளி ஒருவர், ஏப்ரல் 24-ம் தேதி கொரோனா அறிகுறிகளுடன், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி, மே 20-ம் தேதி மருத்துவமனையில் உயிரிழந்தார். இறந்தவரின் மகனிடம் மருத்துவமனை நிர்வாகம் ரூ.16 லட்சம் கட்டணமாக கேட்டுள்ளது.

ஆனால் காப்பீடு செய்துள்ள தனியார் காப்பீட்டு நிறுவனத்திடம் விசாரித்ததில், ரசீதுகளில் கட்டணமாக 11.55 லட்சம் என கட்டணம் குறிப்பிடப்பட்டுள்ளது தெரிய வந்தது.

இதையடுத்து, கூடுதலாக தொகையை நிர்ணயித்து மோசடி செய்ய முயன்றதாக, கோவை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகார்கள் அடிப்படையில் விசாரணை நடத்த குழு அமைத்து, மாவட்ட ஆட்சியர் நாகராஜன் உத்தரவிட்டிருந்தார்.

சம்மந்தப்பட்ட மருத்துவமனைக்கு விசாரணைக்கு அதிகாரிகள் சென்ற போது, மருத்துவமனை நிர்வாகம் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என கூறப்படுகின்றது. விசாரணை அதிகாரிகள் கேட்ட ஆவணங்களையும் கொடுக்க மறுத்துள்ளனர்.

இதனையடுத்து, அந்த மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சை அளிக்க வழங்கப்பட்ட அனுமதியை, அதிகாரிகள் ரத்து செய்தனர். இதற்கான உத்திரவினை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மருத்துவமனைக்கு வழங்கினார்.

மேலும் மருத்துவமனையில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளித்து அவர்களை டிஸ்சார்ஜ் செய்யவும், விசாரணை முடியும் வரை புதியதாக யாருக்கும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கக்கூடாது எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Updated On: 4 Jun 2021 8:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  2. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  3. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  4. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  5. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  6. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  7. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  8. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  9. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  10. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!