/* */

தடுப்பூசி போட்டதால் 3 மாத குழந்தை உயிரிழப்பு ?

தடுப்பூசி போட்டதால் 3 மாத குழந்தை உயிரிழப்பு ?
X

கோவை மாவட்டத்தில் தடுப்பூசி போடப்பட்ட நிலையில் மாலையில் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயமுத்தூர் மாவட்டம் மசகாளிபாளையம் அருகே உள்ள சுப்பண்ணா வீதியைச் சேர்ந்தவர் பிரசாத் - விஜயலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு கிஷான் என்ற 3 மாத ஆண் குழந்தை இருந்தது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம் போடப்பட்டிருந்தது. அங்கு பிரசாத் - விஜயலட்சுமி தம்பதி தங்களது குழந்தைக்கு தடுப்பூசி போட்டுள்ளனர். காய்ச்சலோ வலியோ இருந்தால் கொடுக்க வேண்டும் எனக் கூறி சொட்டு மருந்தும் மருத்துவர்கள் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் அவர்கள் வீட்டிற்கு வந்த பிறகும் கூட குழந்தை அழுது கொண்டே இருந்துள்ளது எனவும் பாலும் குடிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் வலி இருக்குமோ என்று எண்ணிய பெற்றோர் குழந்தைக்கு மருத்துவர் கொடுத்த சொட்டு மருந்து கொடுத்துள்ளனர். இதையடுத்து குழந்தை திடீரென மயங்கி விழுந்துள்ளது. உடனடியாக குழந்தையை பக்கத்தில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

அப்போது அங்கிருந்த மருத்துவர்கள் குழந்தை பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கிறது. உடனடியாக கோயமுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லுங்கள் எனக் கூறியுள்ளனர். அவ்வாறு கொண்டு செல்லும் வழியில் குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 18 Feb 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  2. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  3. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  4. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  5. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  6. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  7. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  8. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  9. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  10. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...