/* */

கோவையில் பழுதடைந்த பள்ளி கட்டிடம் இடிப்பு

நெல்லை மாவட்டத்தில் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியாகினர்.

HIGHLIGHTS

கோவையில் பழுதடைந்த பள்ளி கட்டிடம் இடிப்பு
X

பள்ளி கட்டிடத்தை இடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்டத்தில் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியாகினர். இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் பழுதடைந்த கட்டிடங்கள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கோவையில் மாவட்ட கல்வி அதிகாரியின் உத்தரவின் பேரில் பழைய பள்ளி கட்டடங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் பேரில் கோவை பெரியகடை வீதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியின் பழைய கட்டிடம் அடையாளம் காணப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா உத்தரவின் பேரில், அப்பள்ளி கட்டிடத்தை இடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 23 Dec 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  6. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  7. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  8. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  9. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்