/* */

ஆன்லைன் அபராத முறையை கண்டித்து ஆட்டோ ஓட்டுனர்கள் முற்றுகை போராட்டம்

கோவையில், ஆன்லைன் அபராத முறையை கண்டித்து ஆட்டோ ஓட்டுனர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார்கள்.

HIGHLIGHTS

ஆன்லைன் அபராத முறையை கண்டித்து ஆட்டோ ஓட்டுனர்கள் முற்றுகை போராட்டம்
X

ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதை நிறுத்தக்கோரி, கோவையில் போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் கைது செய்யப்பட்டனர்.

மத்திய அரசு சமீபத்தில் போக்குவரத்து சட்டங்களை மறுசீரமைப்பு செய்ததை கண்டித்து, நாடு முழுவதும் தொழிலாளர் நலச்சங்கங்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்கு சிஐடியுவின் தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சங்கம் அழைப்பு விடுத்திருந்தது.

இதன்படி, இன்று நடைபெற்ற முற்றுகை போராட்டத்தின் போது, ஆன்லைன் மூலம் ஆட்டோ ஓட்டுனர்கள் சிறு போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டாலும், ஆயிரக்கணக்கான ரூபாய் அபராதம் வசூலிக்கப்படுகிறது எனவும் எப்.சி சலானுக்கு 650 ரூபாயிலிருந்து 5 ஆயிரம் என 100 மடங்கு கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினர்.

மேலும் எப்.சி தாமதமானால் 10 நாட்களுக்கு 50 ரூபாய் என இருந்த அபராதத்தை நாளொன்றுக்கு 50 ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளதால், ஆட்டோ தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஓட்டுனர்கள் வேதனை தெரிவித்தனர். இதையடுத்து முற்றுகையில் ஈடுபட்ட 80க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

Updated On: 18 April 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  2. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  3. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  7. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  8. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  9. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  10. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை