/* */

தமிழக வணிகவரித்துறையில் 16 இணை ஆணையர்கள் இடமாற்றம் : துறைசெயலர் ஜோதி நிர்மலாசாமி அறிவிப்பு

தமிழக வணிக வரித்துறையில் 16 இணை ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஜோதி துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தமிழக வணிகவரித்துறையில் 16 இணை ஆணையர்கள் இடமாற்றம் :  துறைசெயலர் ஜோதி நிர்மலாசாமி  அறிவிப்பு
X

வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி.

சென்னை: தமிழகத்தில் வணிகவரித் துறை இணை ஆணையர்கள் 16 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அரசாணையில்,

வணிகவரித் துறையில் நிர்வாக அடிப்படையில் 16 இணை ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி சென்னை தெற்கு இணை ஆணையர் ஏ.சுவாமிநாதன் மாற்றப்பட்டு, தமிழ்நாடு வரிகள் மேல்முறையீடு தீர்ப்பாயத்தின் கூடுதல் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை கிழக்கு இணை ஆணையர் எம்.ராஜி நெல்லை இணை ஆணையராகவும், தலைமையக இணை ஆணையர் எம்.குறிஞ்சிசெல்வன் மதுரை இணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். நெல்லை இணை ஆணையர் டி.பத்மாவதி சென்னை தலைமையக இணை ஆணையராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

சென்னை இணை ஆணையர் (நுண்ணறிவு பிரிவு) எஸ்.எம்.சரஸ்வதி தலைமையக இணை ஆணையராகவும் (சட்டம்), திருச்சி இணை ஆணையர் (நுண்ணறிவு) எம்.சரோஜினி, வணிகவரிகள் மேல்முறையீட்டு தீர்ப்பாய மாநில பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மதுரை இணை ஆணையர் (நுண்ணறிவு) எஸ்.ராஸியா சென்னை கிழக்கு இணை ஆணையராகவும், சேலம் இணை ஆணையர் (நுண்ணறிவு) பி.விமலா திருச்சி இணை ஆணையராகவும் (நுண்ணறிவு) நியமிக்கப்படுகிறார்கள்.

நெல்லை இணை ஆணையர் (நுண்ணறிவு) கே.சுகந்தி சேலம் இணை ஆணையராகவும் (நுண்ணறிவு), சென்னை இணை ஆணையர் (மேல்முறையீடுகள்) எம்.ரவி, தலைமையக இணை ஆணையராகவும் (மதிப்பு கூட்டுவரி மற்றும் தணிக்கை) பணியமர்த்தப்படுகிறார். சென்னை இணை ஆணையர் (சட்டம்) ஏ.அன்புகனி, சென்னை தெற்கு இணை ஆணையராகவும், மதுரை இணை ஆணையர் (சட்டம்) ஆர்.சண்முகானந்தன் நெல்லை இணை ஆணையராகவும் (நுண்ணறிவு) பணியமர்த்தப்படுகிறார்கள்.

சென்னை தலைமையக இணை ஆணையர் (மதிப்புக்கூட்டு வரி மற்றும் தணிக்கை) பி.சிவஹரிணி, சென்னை இணை ஆணையராகவும் (மேல்முறையீடுகள்), தலைமையக இணை ஆணையர் (ஜிஎஸ்டி-மேல்முறையீடு) ஆர்.பிரபாவதி சென்னை-2 இணை ஆணையராகவும் (நுண்ணறிவு) நியமிக்கப்படுகிறார்கள். வணிகவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயமாநில பிரதிநிதி கே.எம்கார்த்தி கேயாணி சென்னை இணை ஆணையராகவும் (சட்டம்), வணிகவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயகூடுதல் உறுப்பினர் டி.இந்திராமதுரை இணை ஆணையராக வும் (நுண்ணறிவு) நியமிக்கப்ப ட்டுள்ளனர். இவர் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 24 Jun 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!