/* */

மாமியாரின் கள்ளக்காதலனை வெட்டிய மருமகன் கைது

மாமியாரின் கள்ளக்காதலனான ஆட்டோ டிரைவரை வெட்டி விவகாரத்தில் மருமகன் மற்றும் நண்பர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

மாமியாரின் கள்ளக்காதலனை வெட்டிய மருமகன் கைது
X

பைல் படம்

சென்னை புளியந்தோப்பு கே எம் கார்டன 13வது தெருவைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இன்று காலை 7 மணி அளவில் புளியந்தோப்பு கே எம் காலனி 13வது தெருவில் ஆட்டோ ஓட்டி கொண்டு வரும்போது இரண்டு நபர்கள் வழிமறித்து மணிவண்ணனை சரமாரியாக வெட்டினர்.

இதில் ரத்த வெள்ளத்தில் மணிவண்ணன் சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலை வலது தோள்பட்டை மார்பு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்த மணிவண்ணன் அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்

இது குறித்து வழக்குப்பதிவு செய்த புளியந்தோப்பு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் புளியந்தோப்பு சூளை தட்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் வயது 23 என்ற நபரின் மாமியார் ஈஸ்வரி.

மணிவண்ணன் இருக்கும் அதே பகுதியில் வசித்து வருவதாகவும் மணிவண்ணன் அடிக்கடி தனது மாமியார் வீட்டிற்கு சென்று வருவாராம். இதனால் இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனை பலமுறை பிரகாஷ் கண்டித்தும் மணிவண்ணன் தொடர்ந்து பிரகாஷின் மாமியாருடன் பழகி வந்தார். இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் இன்று காலை தனது நண்பர் சரத் சந்திரன் என்பவருடன் சேர்ந்து மணிவண்ணனை வெட்டியதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரகாஷ் மற்றும் சரத் சந்திரன் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 24 Nov 2021 3:04 PM GMT

Related News

Latest News

  1. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  2. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  3. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  4. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  5. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  6. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  7. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  8. தமிழ்நாடு
    சதுப்பு நிலம் அடையாளம் காணும் பணி துவக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்...
  9. காஞ்சிபுரம்
    சுடுகாடு எங்கே ? தேடி அலைந்த இருளர் குடியிருப்பு வாசிகள்!
  10. காஞ்சிபுரம்
    உள்துறை அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் ஸ்டாலின் - ஜெயக்குமார்!