/* */

சென்னை, புறநகர் வீடுகளில் 82 பாம்புகளை வனத்துறையினர் பிடிப்பு

கனமழை ஒயந்ததும் சென்னை மற்றும் புறநகரில் வீடுகளில் புகுந்த 82 பாம்புகளை வனத்துறையினர் பிடித்துள்ளனர்.

HIGHLIGHTS

சென்னை, புறநகர் வீடுகளில் 82 பாம்புகளை வனத்துறையினர் பிடிப்பு
X

சென்னையில் பிடிபட்ட பாம்புகள்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தில் குடியிருப்புகளில் பாம்புகள் புகுந்து விட்டதாக கிண்டியில் உள்ள வனச்சரக அலுவலகத்திற்கு தகவல்கள் வந்தன.

இதையடுத்து கிண்டி சரகர் தனசேகரன் தலைமையில் பாம்புகளை பிடிக்க 30 பேர் குழு அமைக்கப்பட்டது. கடந்த 2 தினங்களாக வேளச்சேரி, பள்ளிக்கர்ணை, சிட்லபாக்கம், வளசரவாக்கம், விருகம்பாக்கம் உள்பட 145 இடங்களில் இருந்து பாம்பு பிடிக்குமாறு தகவல் தந்தனர். வன பாம்பு பிடிக்கும் ஊழியர்கள் சென்று 25 சாரப்பாம்பு, 8 மண்ணுளிப்பாம்பு, 20 நல்லபாம்பு, 20 தண்ணீர்பாம்பு, 9 கொம்பேரிமூக்கன் என 82 பாம்புகள் பிடித்தனர்.

பிடிப்பட்ட பாம்புகள் மாம்பாக்கம், செங்கல்பட்டு, திருப்போரூர், அச்சரப்பாக்கம் ஆகிய வனப் பகுதிகளில் விடப்பட்டன. குடியிருப்பில் பாம்பு இருந்தால் வன சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 13 Nov 2021 6:30 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  2. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  3. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  4. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  5. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  6. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  7. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  8. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  9. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  10. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...