Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
ஊரடங்கிலும் அம்மா உணவகங்களில் 3 வேளை உணவு
கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அம்மா உணவகங்கள் வழக்கம் போல செயல்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன் படி சென்னையில் 407அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றது.
இந்த உணவகங்களில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நாளிலும் ஏழை எளிய மக்கள் வரிசையில் நின்று தங்களுக்கான மூன்று வேலை உணவினையும் மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர். இதற்கு முந்தைய ஊரடங்கில் இலவசமாக உணவு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதனால் தற்போதும் அவ்வாறு இலவச உணவு வழங்கி இருக்கலாம் என பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்து இருந்தனர்.