/* */

வியாசர்பாடியில் கத்தியை காட்டி பொதுமக்களை அச்சுறுத்திய ரவுடி கைது

சென்னை வியாசர்பாடியில் கத்தியை காட்டி பொதுமக்களை அச்சுறுத்திய ரவுடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

வியாசர்பாடியில் கத்தியை காட்டி  பொதுமக்களை அச்சுறுத்திய ரவுடி கைது
X
கைது செய்யப்பட்ட ரவுடி காளியா.

சென்னை எம்.கே.பி. நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட உதயசூரியன் நகர் பூங்கா அருகே மர்ம நபர் ஒருவர் கத்தியை காட்டி பொதுமக்களை அச்சுறுத்துவதாக எம்.கே.பி. நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற எம்.கே.பி. நகர் சப் இன்ஸ்பெக்டர் மனோஜ் உள்ளிட்ட போலீசார் அங்கு குடி போதையில் கத்தியுடன் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர் கொடுங்கையூர் சுப்பிரமணி தெரு பகுதியை சேர்ந்த யோகேஷ் என்கின்ற காளியா(வயது 23 )என்பதும் இவர் மீது ஏற்கனவே எம்.கே.பி. நகர் வியாசர்பாடி கொடுங்கையூர் ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து எம்.கே.பி. நகர் போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து சுமார் ஒன்றரை அடி நீளமுள்ள கத்தியையும் பறிமுதல் செய்தனர்.

Updated On: 7 March 2022 6:14 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  5. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  6. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  7. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  8. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  9. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  10. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்