/* */

வியாசர்பாடியை அச்சுறுத்திய பிரபல ரவுடி குணா கைது: பொதுமக்கள் நிம்மதி

சென்னை அருகே, வியாசர்பாடியில் பணம் பறித்த் வந்த பிரபல ரவுடி குணா கைது செய்யப்பட்டதால், பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

வியாசர்பாடியை அச்சுறுத்திய பிரபல ரவுடி குணா கைது: பொதுமக்கள் நிம்மதி
X

ரவுடி குணா

சென்னை வியாசர்பாடி எஸ் ஏ காலனி 3வது தெரு சேர்ந்தவர் குமார், வயது 31, இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்றுமுன் தினம் காலை, வியாசர்பாடி எஸ் ஏ காலனி மூன்றாவது தெரு வழியாக செல்லும்போது, குடிபோதையில் அங்கு வந்த நபர், கத்தியை காட்டி மிரட்டி குமாரிடம் இருந்து 1000 ரூபாய் பணத்தை பறித்து சென்றார்.

இதுகுறித்து, எம்கேபி நகர் காவல் நிலையத்தில், குமார் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர், சம்பவ இடத்திற்கு சென்று அதே பகுதியில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த நபரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

இதில், அந்த நபர் வியாசர்பாடி எஸ் ஏ காலனியைச் சேர்ந்த குணா, வயது 26 என்பதும், அவர் மீது ஏற்கனவே வியாசர்பாடி எம்கேபி நகர், கொடுங்கையூர் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. ரவுடி குணா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 23 Jan 2022 12:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  2. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  3. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  4. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  5. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  6. நாமக்கல்
    சுத்தமான இறைச்சி மட்டுமே பயன்படுத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர்...
  7. வீடியோ
    பெயிலில் வெளியே சுத்தும் ராகுல் மற்றும் சோனியா காந்தி !#Rsrinivasan...
  8. மேலூர்
    மதுரை மக்களிடம் விடைபெற்று பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார்...
  9. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  10. குமாரபாளையம்
    குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த குமாரபாளையம் நகராட்சி ஆணையர் வேண்டுகோள்