/* */

பெரம்பூரில் பணம் வராததால் ஏடிஎம் உடைத்த போதை ஆசாமி கைது

பெரம்பூரில் பணம் வராததால் ஏடிஎம் உடைத்த போதை ஆசாமி கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

பெரம்பூரில் பணம் வராததால் ஏடிஎம் உடைத்த போதை ஆசாமி கைது
X

சென்னை பெரம்பூர் ரமணா நகர் ஜவகர் ரோடு பகுதியில், ஏடிஎம் மையம் இயங்கி வருகிறது. நேற்றிரவு 7 மணி அளவில் ஏடிஎம் மிஷினை மர்மநபர் ஒருவர் அடித்து உடைப்பதாக, செம்பியம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற செம்பியம் போலீசார், போதையில் இருந்த வடமாநில இளைஞரை கைது செய்தனர்.

அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில், பீகார் மாநிலத்தை சேர்ந்த சனோஜ் ராம் 28 என்பதும் இவர் ரமணா நகர் பகுதியில் குடிசை மாற்று வாரிய கட்டிடத்தில், மேஸ்திரியாக கடந்த ஒரு வருடமாக வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

ஏற்கனவே மது போதையில் இருந்த நபர், மேலும் மது அருந்துவதற்காக ஏடிஎம்-க்கு சென்று பணம் எடுத்தபோது, பணம் வராத காரணத்தினால் ஆத்திரத்தில், மிஷினை கல்லால் அடித்து உடைந்ததாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து செம்பியம் போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 3 Jan 2022 7:16 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  4. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  7. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  8. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  9. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  10. வீடியோ
    🔴LIVE : மீண்டும் அயோத்தியில் பாரத பிரமர் மோடி || PM Modi performs...