/* */

தமிழகத்துக்கு மேலும் 6.24 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று சென்னை வருகை

தமிழகத்துக்கு மேலும் 6,24,000 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 52 பாா்சல்களில் புனேவிலிருந்து விமானத்தில் சென்னை வந்தன.

HIGHLIGHTS

தமிழகத்துக்கு மேலும் 6.24 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று சென்னை வருகை
X

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை மே மாதம் உச்சக்கட்ட பாதிப்பை ஏற்படுத்தியது. தமிழக அரசு எடுத்த தீவிர நடவடிக்கைகள், கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது.

இரண்டாம் அலை பாதிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில், கடந்த சில தினங்களாக சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தினசரி பாதிப்பு ஏற்ற இறக்கத்துடன் அதிகரித்து வருகிறது.

இது கொரோனா வைரஸ் 3 ஆம் அலை தொடங்குவதற்கான அறிகுறியாக இருக்கக்கூடும் என்று மருத்துவ வல்லுனா்கள் குழு எச்சரித்துள்ளது. அதிலிருந்து தப்பிக்க 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் 2 டோஸ்களையும் உடனே போட்டுக்கொள்ள வேண்டும். அதோடு அனைவரும் மாஸ்க் அணிவது, பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதை தொடா்ந்து மக்கள் அனைவரும் கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இதையடுத்து தமிழக அரசு மக்கள் அனைவரையும் கட்டாயமாக தடுப்பூசிகள் போடும்படி அறிவுறுத்தியுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் தடுப்பூசிகள் போட்டுக்கொள்வதில் மிகுந்த ஆா்வம் காட்டுகின்றனா். நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசிகளை போட்டுக்கொள்கின்றனா். எனவே தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன. இதையடுத்து தமிழ்நாடு அரசு,ஒன்றிய அரசிடம் கூடுதலாக தமிழகத்திற்கு தடுப்பூசிகளை அனுப்பும்படி கோரிவருகிறது.

இந்நிலையில், ஒன்றிய சுகாதாரத்துறை தமிழகத்திற்கு இன்று, மகராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஒன்றிய மருந்து கிடங்கிலிருந்த 6,24,000 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை விடுவித்தது. அந்த 6,24,000 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் அடங்கிய 52 பாா்சல்கள் புனேவிலிருந்து சென்னை வரும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் ஏற்றப்பட்டு, சென்னை விமானநிலையம் வந்து சோ்ந்தன. உடனடியாக சென்னை விமானநிலைய லோடா்கள் தடுப்பூசி பாா்சல்களை விமானத்திலிருந்து கீழே இறக்கினா்.

அந்த தடுப்பூசி பாா்சல்களில் 2,64,000 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் அடங்கிய 22 பாா்சல்கள் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறைக்கு நேரடியாக வந்துள்ளன. எனவே அந்த தடுப்பூசி பாா்சல்கள் தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அவா்கள் குளிா்சாதன வாகனங்களில் ஏற்றி,சென்னைக்கு தேனாம்பேட்டையில் டிஎம்எஸ் அலுவலகத்திற்கு எடுத்து சென்றனா்.

சென்னை பெரியமேட்டில் உள்ள ஒன்றிய மருந்து கிடங்கிற்கு 3,60,000 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் அடங்கிய 30 பாா்சல்கள் வந்திருந்தன. அவைகளை ஒன்றிய மருத்துவ கிடங்கு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

Updated On: 17 Aug 2021 3:54 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!