/* */

17ம் தேதி முதல் முழு நேர அன்னதான திட்டம்: அமைச்சர் சேகர்பாபு உறுதி

திருச்செந்தூர் உள்ளிட்ட 3 கோவில்களில் முழு நேர அன்னதான திட்டம் 17ம் தேதி தொடங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

HIGHLIGHTS

17ம் தேதி முதல் முழு நேர அன்னதான திட்டம்: அமைச்சர் சேகர்பாபு உறுதி
X

அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு.

சென்னை புரசைவாக்கத்தில் தடுப்பூசி முகாமை தொடங்கி அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, கொரோனா தடுப்பூசி ஒரு இயக்கமாக தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது. அனைவரும் தடுப்பூசி செலுத்த முன்வர வேண்டும். அறநிலையத்துறையில் சிறப்பாக செயல்பட்டு வருவதால், செயல் பாபு என முதலமைச்சர் என்னை கூறியது ஊக்கமளிப்பதாக உள்ளது. எல்லாப்புகழும் இறைவனுக்கே என்பது போல எல்லாப்புகழும் முதலமைச்சருக்கே.

அனைத்து வாக்குறுதிகள் அனைத்தும் செயல்படுத்துவோம்.திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி ஆகிய 3 கோவில்களில் முழு நேர அன்னதானம் திட்டம் வரும் 17ம் தேதி தொடங்கப்படும்.

நீட் தேர்வால் தற்கொலை போன்ற முடிவுகளை மாணவர்கள் கைவிட வேண்டும். முதலமைச்சர் விரைவில் சட்ட போராட்டத்தின் மூலம் நீட் தேர்வு ரத்து செய்வார் எனவும், தற்கொலை தீர்வு அல்ல. அறநிலையத்துறையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் அடுத்தாண்டு மானிய கோரிக்கைக்குள் நிறைவேற்றப்படும் என்றார்.

Updated On: 12 Sep 2021 10:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!